உழவர் சந்தையில் அமைச்சர் ஆய்வு
திருப்பூர், ஜூன் 11 - திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தையில் ஞாயிறன்று அதிகாலை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் ஆய்வு மேற்கொண் டார். திருப்பூர் மாவட்ட ஆட் சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் நடைபெற்ற இந்த ஆய்வில் உழவர் சந்தையில் விவ சாயிகள், பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட் டறிந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இங்கு தொன்மை சார் பொருட்கள் அங்காடியையும் அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத் தார்.
மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் மறியல் திறக்கக்கோரி போதை ஆசாமிகள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜூன் 11- ஈரோடு அருகே மதுக்கடையை அகற்றக் கோரி பெண்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட நிலையில், திறக்கக்கோரி போதை ஆசாமிகள் போட்டி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே வெள்ளைப்பாறைமேடு என்ற பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பகுதி யைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஞாயிறன்று மதுக்கடையை மூடக்கோரி குரு மந்தூர்-கொளப்பலூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள், தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் இந்த மதுக்கடையில் குடித்துவிட்டு இங் கேயே தங்கி விடுகின்றனர். எந்த வேலைக்கும் செல்லாமல் மதுக்கடை யிலேயே இருப்பதால் குடும்பம் நடத்த முடி யாத நிலை உள்ளது. எனவே இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என்று தெரி வித்தனர். பெண்கள் சாலைமறியல் காரணமாக ஞாயிறன்று டாஸ்மாக் கடை திறக்கப்பட வில்லை. இந்நிலையில் டாஸ்மாக் கடையில் மது குடிக்க காலை 11 மணியில் இருந்தே ஏராளமான ஆண்கள் காத்து இருந்தனர். ஆனால் பெண்கள் போராட்டம் காரணமாக 12 மணி ஆகியும் மதுக்கடை திறக்கப்படாத தால் அதிர்ச்சி அடைந்த ஆண்கள் 100க்கும் மேற்பட்டோர் மற்றொரு புறம் நின்று கொண்டு மதுக்கடையை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போட்டி போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
சிறுமி பாலியல் வன்கொடுமை 3 பேர் போக்சோவில் கைது
தருமபுரி, ஜூன் 11- தருமபுரி அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். தாயார் இல்லாததால், தனது தந்தையுடன் சிறுமி வசித்து வந்தார். தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்துள்ளார். கடந்த மே 25 ஆம் தேதியன்று இரவில், ஊரில் மழை வேண்டி அர்ஜூனன் தபசு தெருக்கூத்து நடந்துள்ளது. அப்போது, தெருக்கூத்து கலைஞர்களான சொக்கனேரியை சேர்ந்த கொல்லாபுரி (65), பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (48), மஞ்சுநாதன் (33) ஆகியோர் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த சிறுமியை அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என 3 பேரும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதனால் அந்த சிறுமி அச்சமடைந்து உள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக உறவினர்கள் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது தன்னை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், தருமபுரி சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தருமபுரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்த கொல்லாபுரி, மணிகண்டன், மஞ்சுநாதன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
பள்ளிகள் திறப்பு: தூய்மைப்பணி தீவிரம்
கோவை, ஜூன் 11- கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படு வதையொட்டி, பள்ளிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய் மைப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோடை விடுமுறைக்கு பிறகு திங்களன்று (இன்று) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையும், ஜூன் 14 ஆம் தேதி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளன. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை, சுல்தான்பேட்டை, நெகமம், வால்பாறை பகுதிகளில் 424 தொடக்கப்பள்ளி களும், 105 நடுநிலைப்பள்ளிகளும், 37 உயர்நிலைப்பள்ளி களும், 40 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. நகராட்சி பள்ளி களில் நகராட்சி நிர்வாகங்கள் மூலம் வகுப்பறைகள், கழிப் பிடங்கள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப் பட்டு வருகின்றன. ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணியில் பணி யாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையில் பள்ளிகளில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் குறித்து கல்வித்துறை அதி காரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில், கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், முறையாக தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். வகுப்பறைகள், வளாகங்களை சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பிடங்கள், குடிநீர் தொட்டிகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதற்கிடையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு களில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு முடியும் வரை அந்த மாண வர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், அடுத்த கல்வியாண்டிற்கான கலை திருவிழா போன்ற போட்டி களுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். பள்ளிகள் திறக்கும் முதல் நாளே மாணவ, மாணவிக ளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதி களையும் ஏற்படுத்த வேண்டும், என்றனர்.
சந்தனமரம் வெட்டி கடத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
உதகை, ஜூன் 11- மஞ்சூர் அருகே சட்டவிரோதமாக சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்ற வருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் - கோவை சாலையில் கெத்தை காப்புகாடுகள் உள்ளது. குந்தா வனச்சரகத்திற்குட் பட்ட இந்த காடுகளில் விலை உயர்ந்த மரங்கள், தாவரங்கள், மூலிகை செடி களுடன் சந்தன மரங்களும் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்.2 ஆம் தேதியன்று குந்தா வனத்துறையினர் கெத்தை பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது எல்.ஜி.பி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த சரக்கு வாக னத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட னர். அப்போது வாகனத்தில் சந்தன கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந் தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைய டுத்து வனத்துறையினர் சந்தன கட்டை களுடன், ஜீப்பை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரளா மாநிலம், பாலக் காடு மாவட்டத்தை சேர்ந்த திலீப் என்ப வர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலை யில், வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் காப்புக்காட்டில் சந்தன மரத்தை வெட்டி கடத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஈரோடு, ஜூன் 11- கவுந்தப்பாடி அருகே லாட் டரி சீட்டு விற்றவரை போலீ சார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கவுந் தப்பாடி - ஆப்பக்கூடல் சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், கவுந்தப் பாடி போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று கேரளா மாநில லாட்டரி சீட்டு விற் பனை செய்த கவுந்தப்பாடி, திருநீலகண்ட வீதியைச் சேர்ந்த ரவி (49) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 5 லாட்டரி சீட் டுக்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
பட்டு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி
நாமக்கல், ஜூன் 11- நாமக்கல்லில் பட்டு வளர்ப்பு குறித்து ஜூன் 14 ஆம் தேதி யன்று இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியரும், தலைவருமான வேல்முருகன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஜூன் 14 ஆம் தேதி யன்று காலை 10 மணிக்கு “பணம் கொழிக்க பட்டு வளர்ப்பு, நவீன தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் ஒரு நாள் இல வச பயிற்சி நடைபெற உள்ளது. அதில் பட்டு செடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு, பட்டு வளர்க்க அரசின் மானிய திட்டங் கள், பட்டு செடியில் தோன்றக்கூடிய பூச்சிகள், நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள், பட்டுபுழு வளர்ப்பு, அறை அமைத் தல், அதில் ஏற்படும் இடர்பாடுகள், அதற்கான தீர்வுகள், பட்டு கூண்டு சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளன. பட்டு வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண் ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் பட்டு வளர்ப்பு தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி யில் கலந்து கொள்ளலாம். நாமக்கல் மாவட்ட விவசாயிக ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பப் டுள்ளது.
சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர்
சேலம், ஜூன் 11- ஏற்காட்டில் சனியன்று இரவு விடிய விடிய பெய்த கன மழையால், சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. சேலம் மாவட்டம், ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனியன்று இரவு ஏற்காடு டவுன், மஞ்சகுட்டை, நாகலூர், பக்கோடா பாயிண்ட், தமிழ்நாடு ஹோட்டல் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இடைவிடா மல் பெய்த கனமழையின் காரணமாக ஏற்காடு இருளில் மூழ்கி யது. விடிய விடிய மிதமான மழை பெய்த நிலையில், ஏற்காட் டில் உள்ள பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இந்த மழை நீரில், சாக்கடை நீரும் கலந்து நிற்ப தால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். சாலையை கடக்கின்ற ஒவ்வொரு சுற்றுலா பயணி களும் முகம் சுளிக்கின்ற வகையில் துர்நாற்றம் வீசி வரு கிறது. அண்ணா பூங்கா சாலையிலும், சிறுவர் பூங்கா பகுதி யில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, ஏற்காடு பகுதியில் மழைநீர் வடிகாலை முழுமையாக சீரமைத்து. மழைநீர் செல்ல பாதைகள் ஏற்படுத்தினால் மட்டுமே இது போன்ற நிலை மாறும் என சுற்றுலா பயணிகள் தெரிவித்துள் ளனர்.