திருப்பூர், செப். 1- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய ஆசிரியர்களுக்கான கனவு ஆசிரியர் புத்தாக்க பயிற்சி கருமாரம்பாளையம் ரோட்டரி அரங்கத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய போது, “ஆசிரியர்கள் இது போன்ற பயிற்சி யில் ஈடுபடுவதை வரவேற்றார். இன்றைய சூழலில் கல்வி யின் நிலை குறித்தும், நடைமுறையில் கற்பித்தலுக்கு சவால்க ளாக இருப்பதை சுட்டிக்காட்டி, சமூக நலன் சார்ந்த கற்பித் தலை ஊக்குவிக்கும் விதத்தில் கருத்துகளை பகிர்ந்து கொண்டு, வகுப்றையில் மேல் நோக்கிய அதிகாரம் செலுத்து வதை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்தார். பாடப் புத்தக அறிவை வெறுமனே பாடப் புத்தக அறிவாக வும், தேர்வுக்கான மதிப்பெண்ணாகவும் அல்லாமல் ஆசி ரியர்கள் அதனை மாணவர்களின் சொந்த அறிவாய் மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் காத்தவராயன், எளிய அறிவியல் சோதனைகளை எவ்வாறு செய்யலாம் என்ப தனை மிகவும் சுவைபட கூறி, ஆசிரியர்களை வைத்து ஒவ்வொரு செயல்பாட்டினையும் மிகுந்த உற்சாகத்துடனும் விளக்கங்களுடனும் விரிவாக எடுத்துரைத்தார். முன்னதாக நிகழ்வில் பங்கேற்றோரை மாவட்ட பொரு ளாளர் கார்த்திக் வரவேற்றார். பயிற்சியின் நோக்கம் குறித்து மாநில செயலாளர் ராமமூர்த்தி உரையாற்றினார். வடக்கு ரோட்டரி சங்க தலைவர் செல்லதுரை, செயலாளர் பாலமுரு கன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் சான்றிதழும், துளிர் புத்தகம், ஆயிஷா நடராஜன் எழுதிய எங்கள் தேசம் புத்தகமும் வழங்கப்பட்டன. நிறைவாக மாவட்ட செயலா ளர் கெளரி சங்கர் நன்றி கூறினார்.