திருப்பூர், நவ.1– அதானி, அம்பானி மோடியுடன் உள்ளனர். மக்கள் எங்களோடு உள் ளனர். எனவே இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெறும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரி வித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், ரங்கநாத புரம் கொடிக்கம்பம் பகுதியில் திராவி டர் கழகம் சார்பில் குலத்தொழிலைத் திணிக்கும் விஸ்வகர்மா யோஜனா எதிர்ப்பு பொதுக்கூட்டம் செவ்வா யன்று நடைபெற்றது. இதில் திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசுகையில், பாஜக ஒரு இரட்டை நாக்கு கட்சி. வெளிப் படையாக கூறுவது ஒன்று, உள் ளார்ந்த விஷயத்தில் வேறொன்று இருக்கும். சாதி தொழில்தான் செய்ய வேண்டும் என்றால் ஆடு மேய்த்த வர் ஐபிஎஸ் ஆகி இருக்க முடியுமா? முன்பு சமஸ்கிருதம் படித்தால் மட் டுமே மருத்துவர் என்ற நிலை இருந் தது. அது ஒழிக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது நீட் தேர்வினால் ஒடுக் கப்பட்டவர்கள் யாரும் மருத்துவராக முடியவில்லை. நீட்டில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்கள் கூட தேர்ச்சி என்று மருத்துவர் ஆகிறார் கள். சந்திராயன் ஆராய்ச்சியில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் குலத் தொழில் கல்வித் திட்டம் ஒழிந்தபின் விஞ்ஞானி ஆனவர்கள். விஸ்வகர்மா யோஜனா திட்டம் ஒரு குலக்கல்வி திட்டம். பெண்கள் கையில் பானை கொடுக்கப்பட்டுள் ளது. இது குலத்தொழிலை மீண்டும் ஊக்குவிக்கும். குல தர்மம் என்பது சனாதன தர்மம்தான். எவ்வளவு பிற் போக்குத்தனமாகக் கொண்டுபோக முடியுமோ அப்படி கொண்டு போய்க் கொண்டிருக்கிறது மோடி அரசு. அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும். மோடி திரிசூலத்தை கையில் வைத் துள்ளார். ஒன்று வருமானவரித் துறை. மற்றொன்று சிபிஐ. மூன்றா வது அமலாக்கத்துறை. இது அனைத் தும் மக்கள் முன்பு எடுபடாது. உங்க ளிடம் அதானி, அம்பானி உள்ளார் கள். எங்களோடு மக்கள் உள்ளார் கள். எனவே, ‘இந்தியா’ கூட்டணி பெரும் வெற்றி பெரும், என்றார். இக் கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் திமுக தோழமை கட்சிகளைச் சேர்ந்த ஏராள மானோர் கலந்து கொண்டனர்.