ஈரோடு, ஆக. 22- ஈரோடு மாநகராட்சியின் வழிகாட்டு தலில் ஒளிரும் ஈரோடு, தொழில் நிறு வனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்க ளிப்புடன் ஓடைகள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என அமைச் சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப் பில் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், சுண்ணாம்பு ஓடை பகுதியில் ஈரோடு மாநகராட்சி, ஒளிரும் ஈரோடு மற்றும் பொதுமக்கள் இணைந்து தூர்வாரும் பணிகளை வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி வியா ழனன்று தொடங்கி வைத்தார். மாநக ராட்சியில் உள்ள அனைத்து ஓடை களையும் ஒரே நேரத்தில் தூர்வாரி மழை காலங்களில் சீராக தண்ணீர் செல்லும் வகையில், புனரமைப்பு பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர், செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாநகராட்சியின் பரப்ப ளவு 109.52 ச.கி.மீ. மாநகராட்சியின் எல்லையிலிருந்து காவேரி ஆற்றில் கலக்கும் வகையில் மாநகராட்சி பகுதி யில் 8 ஓடைகள் உள்ளது. மழைக்காலத் தினை கருத்தில் கொண்டு தூர்வா ரும் பணி துவங்கி வைக்கப்பட்டிள் ளது. இப்பணிகள் ஏறத்தாழ 29.38 கி.மீ நீளமுள்ள 8 ஓடைகளை தனியார் பங்களிப்புடன் ஒரே கால நேரத்தில் சுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட் டுள்ளது. ஈரோடு மாநகராட்சியின் வழி காட்டுதலில் ஒளிரும் ஈரோடு,தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ஓடைகள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி சார்பாக மொத்தமாக இருந்த 947.6 கி.மீ நீளத்தில் உள்ள கால் வாய்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு ஏறத் தாழ 762 கால்வாய்களுக்கு இருபுறமும் சுவர் அமைத்து, தூய்மைப் படுத்தப்பட் டுள்ளது. மற்ற பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இந்த கழிவுநீர் முழுமையாக வெளியேறுவ தற்கான வாய்ப்பு உள்ளது. அந்த ஏற்பா டும் தற்பொழுது மேற்கொள்ளப்பட் டுள்ளது. பேபி வாய்க்கால் காலிங்கராயன் வாய்க்காலுக்கு பாதுகாப்பாக அமைந் துள்ளது. எனவே பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற் கொண்டு, இந்த வாய்க்காலினை சுத் தம் செய்வதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். சாயக்கழிவு மற்றும் தோல் கழிவுகளை நேரடியாக திறந்து விடுவதை தவிர்க்க வேண்டும். பொது மக்களுக்கும், நிலத்தடித் நிருக்கும் மாசுபாடு எற்ப்படுத்தினால் கடுமை யாக நடவடிக்கை மேற்கொள்ளப் படும். அந்த அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது. எனவே,சாயக்கழிவு நீரினை சுத்திகரிக்காமல் வெளியேற்றக் கூடாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். குப்பைகளை முறை யாக மாநகராட்சியின் தூய்மை பணியா ளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே, மாநகராட்சி மட்டுமல்லாது பொதுமக்கள் மற்றும் தொழில் நிறு வனங்களும் ஒருங்கிணைத்து இப்பணி களை மேற்கொள்ளும்போது மிகச்சிறப் பாக பாதுகாக்க இயலும் என்றார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநக ராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், ஆணையாளர் மனிஷ், பொறியாளர் விஜயகுமார், ஒளிரும் ஈரோடு அமைப்பு நிறுவனர் சின்னசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.