சேலம், ஏப்.12- தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றியமைத்து, தொழிலாளர்களை நசுக்கும் பாஜக கூட்டணிக்கு வாக்க ளிக்க வேண்டாம் என வலியுறுத்தி சேலத்தில் அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகின்றனர். ஒன்றிய மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் நாட்டையும், நாட்டு மக் களையும் பின்னோக்கி சென்றடைய செய்துவிட்டனர். மாநில உரிமைகளை பறித்து மாநிலங்களுக்கு வரவேண் டிய திட்டங்களை பறித்துள்ளது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம். முறைசாரா தொழிலாளர்களுக்கு சட்ட சமூக பாதுகாப்பை உருவாக்கிடவும், சிறு குறு தொழில்கள் அழிவுபாதையில் செல்வதை தடுத்திடவும் இந்தியா கூட் டணிக்கு தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் எனக்கூறி சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகண பதிக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங் கத்தினர் தீவிர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் ஜங்ஷன், உழவர் சந்தை பகுதியில் காலை துவங்கிய பிரச்சாரம், திருவாக்கவுண் டனூர் மூன்று ரோடு, புதிய பேருந்து நிலையம், மெய்யனூர் ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வள்ளுவர் சிலை, கிச்சிபாளையம், குகை காலனி, அண்ணா நகர் பகுதிகளில் நடைபெற் றது. சிஐடியு தலைவர் எஸ்.கே.தியா கராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் எல்எல்எப் மாவட் டச் செயலாளர் பொன்னி.பழனியப் பன், கிருஷ்ணமூர்த்தி, கருப்பையா, டாஸ்மாக் ஊழியர் சங்க ஜம்பு, சிஐ டியு மாவட்டச் செயலாளர் கோவிந்தன், பொருளாளர் இளங்கோ, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, ஏஐடி யுசி மாவட்டச் செயலாளர் முருகன், ஐஎன்டியுசி நடராஜன், எச்எம்எஸ் கணே சன், ஏஐசிசிடியு நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.