கோவை, ஜன. 6- தமிழ்நாடு அரசு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை விரிவாக்கம் செய்வது என்ற அடிப்படையில் மாநகராட்சி, நக ராட்சியுடன் கிராமப்புற பஞ்சாயத்து களை இணைப்பதும் மாநகராட்சி உடன் பேரூராட்சி நகராட்சி கிராமப்புற ஊராட்சிகளை இணைப்பதும் கிராமப் புற ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற் றுவதும் என்று தமிழ்நாடு அரசு கருத்து ருவாக்கி அரசாணை வெளியிடப்பட் டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு மாநிலம் முழு வதும் எழுந்துள்ளது. கோவை கீரணத்தம் கிராம ஊராட் சியை மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். கீரணத்தம் ஊராட்சி இயற்கை வள மும், வேளாண் நிலமும் அதிகம் கொண்ட பகுதியாகவும், வேளாண் சார்ந்த பணியாளர்கள் உள்ள பகுதி யாகவும் திகழ்ந்து வருகிறது. மேலும் இந்தியாவிலேயே உள்கட்டமைப்பு வச திகளில் தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசையும் பெற்றுள்ள ஊராட்சி. மேலும் சிறந்த பருத்தி உற்பத்திக் கான முகாந்திரம் கிராமம் என்ற பெரு மையுடையது., பல்வேறு வகையான பருப்பு மற்றும் பயிர் வகைகள் பயி ரிடுவதிலும், பயிர் மேலாண்மையிலும் சிறந்து விளங்கும் ஊராட்சியாக உள் ளது. இவ்வாறு பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் கீரணத்தம் ஊராட் சியை, மாநகராட்சியுடன் இணைக்கும் இந்த முன்மொழிவினை அரசு கைவிட வேண்டும், உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
கவுந்தப்பாடி கிராம ஊராட்சி
கவுந்தப்பாடி கிராம ஊராட்சியை நகராட்சியாக மாற்றக்கூடாது என விவசாய தொழிலாளர்கள் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டத் திற்குட்பட்ட கவுந்தப்பாடி கிராம ஊராட்சியாகும். இங்கு சுமார் ஆயிரத் திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்றுள்ளனர். அத்து டன் இலவச வீட்டு மனை, தொகுப்பு வீடு கோரிக்கையுடன் பலர் உள்ளனர். சாலை, சாக்கடை மற்றும் தெருவி ளக்கு வசதிகள் நிறைவேற்றப்படாத குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அருகில் உள்ள கிராமங்களை இணைத்து இக்கிரா மத்தை நகராட்சியாக தரம் உயர்த்த அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தினர் கவுந்தப் பாடியில் திங்களன்று கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுந்தப்பாடி கிராம ஊராட்சியாக தொடர வேண்டும். 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பி னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தன்னா சிபட்டி அமைப்பாளர் ஜானகி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.விஜ யராகவன், பொருளாளர் எஸ்.மாணிக் கம், மாவட்ட குழு உறுப்பினர் நர்மதா மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனி சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்திற் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஈரோடு வட்ட கிராம ஊராட்சிகளை மாநகராட்சியில் இணைக்க விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் ஈரோடு தாலுகா தலை வர் முருகன் திங்களன்று மாவட்ட ஆட்சி யரிடம் வாராந்திர குறைதீர் கூட்டத் தில் அளித்துள்ள மனுவில் தெரி வித்துள்ளதாவது, நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஈரோடு வட்டத்திற்குட்பட்ட மேட்டுநாசு வம்பாளையம் மற்றும் கதிரம்பட்டி ஊராட்சிகளை ஈரோடு மாநகராட்சியில் இணைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விவ சாயத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படுவார்கள். எனவே மேற்படி இணைப்பை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராக வன், மூத்த தோழர் இளங்கோ மற்றும் நூற்றுக்கணக்கான விவசாயத் தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி
இதேபோன்று, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்டது கூத் தப்பாடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டி யல் பழங்குடி மக்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் ஒகேனக்கல் அமைந் துள்ளது. இங்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வனத்தையெட்டி விவசாய கூலி வேலை, மீன் பிடித்தல், நூறு நாள் வேலை ஆகிய வேலைகளை செய்து வாழ்க்கை நடத்தி வருகின் றனர். இந்த கிராம ஊராட்சியை பென்னா கரம் பேரூராட்சியுடன் இணைத்துள்ள னர். பேரூராட்சிக்கு செல்லவேண்டும் என்றால் 16 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். கூலி வேலையை நம்பி யுள்ள தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலை கிடைக்காமல் போகும் வாழ் வாதாரம் பாதிக்கப்படும். எனவே கூத் தப்பாடி ஊராட்சியை ஒருபகுதி பிரித்து ஒகேனக்கல் ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியு றுத்தி உள்ளனர். அதேபோல் பென்னாகரம் வட்டத் தில் உள்ள பருவதன அள்ளி ஊராட்சி யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட் சியை பென்னாகரம் பேரூராட்சியிடன் இணைக்கப்பட்டால் கூலி தொழிலாளர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே பேரூராட்சியுடன் இணைப் பதை கைவிட வேண்டும் என ஆட்சியரி டம் மனு அளித்தனர். இதேபோன்று, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடச முத்திரம் ஊராட்சியை பாப்பிரெட்டிப் பட்டி பேரூராட்சியுடன் இணைப்பதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரி வித்துள்ளனர். சிபிஎம் எதிர்ப்பு மக்கள் கருத்தரியாமல் நாங்கள் இணைக்க மாட்டோம் என்று உள்ளாட் சித்துறை செயலாளர் அறிவித்த நிலை யில், தற்போது, மக்கள் விருப்பத்திற்கு விரோதமாக மக்கள் கருத்தரியாமல் இணைப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதற்கு, விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு எதிர்ப்பு தெரிவித்து தீர் மானத்தை நிறைவேற்றியுள்ளது குறிப் பிடத்தக்கது.