தருமபுரி, ஜூலை 19- தீர்மானம் நிறைவேற்றும் புத்தகத்தை காண்பிப்பதில்லை என தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தருமபுரி மாவட்டம், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் செவ்வாயன்று மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் யசோதா மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில், துணைத்தலைவர் சரஸ்வதி, செயலா ளர் மாரிமுத்து ராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ.2 கோடியே 16 லட்சம் நிதி வந்துள்ளது. அதற்குரிய பணி களை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் பணிகளை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி தரப் படும். எனவே, அனைத்து கவுன்சிலர்களும் ஒரே நேரத்தில் தங்களுக்குரிய பணிகளை தேர்வு செய்து இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 2020 - 21 ஆம் நிதி யாண்டில் தேர்வு செய்யப்பட்ட 185 பணி களில் 78 பணிகள் நிறைவடையாமல் நிலு வையில் உள்ளன. மேலும், 2021 - 22 ஆம் நிதி யாண்டில் 68 பணிகள் நிலுவையில் உள்ளன. இந்த பணிகளை விரைவாக முடிக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தெரி வித்தார். இதற்கிடையே கடந்த இரண்டரை ஆண் டுகளில் இதுவரை தீர்மானம் நிறைவேற்றும் புத்தகத்தை உறுப்பினர்களுக்கு காண்பிக்க வில்லை. இதனால் யாருக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. தீர்மான புத்தகத்தை உறுப்பினர்கள் பார் வைக்கு வைக்க வேண்டும். ஏரியூர், பென்னா கரம் பகுதிகளில் மின் கம்பம் அமைத்து விளக் குகள் பொருத்தும் பணி நிலுவையில் உள் ளது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.