சேலம், ஜூலை 19- உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணிகளை அவுட்சோர்சிங் விடுவதை கண்டித்து, சிஐடியு சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநகராட்சி, நகராட்சிகளின் அரசாணை 152, 139,10ஐ திரும்ப பெற வேண்டும். ஒப்பந்த தொழிலாளி, சுய உதவி குழுக்கள் என்ற பெயரால் உழைப்பு சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கிராம ஊராட்சி ஓஎச்டி ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன் தலைமை ஏற்றார். சிஐடியு சுமைப்பணி சங்க மாநிலத் தலைவர் ஆர். வெங்கடபதி துவக்கிவைத்து உரையாற்றி னார். மாவட்டத் தலைவர் எஸ்.கே.தியாக ராஜன் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட உதவித் தலை வர் பொ.பன்னீர் செல்வம், மாவட்டப் பொரு ளாளர் வீ.இளங்கோ, மற்றும் இணைக்கப் பட்ட சங்க மாவட்ட நிர்வாகிகள் சி.கருப் பண்ணன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பி. முருகேசன், சி.மோகன், சி.உதயகுமார், தன சேகர், விஜயலட்சுமி உள்ளிட்ட சங்க நிர்வாகி கள், தூய்மை பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.