districts

img

சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை சிதைக்காதே

மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்  கோவை, ஜூன் 30–  இந்திய சிறுபான்மை மக்களை இரண் டாந்தர குடிமக்களாக சித்தரித்து, புல்டவுசர் கொண்டு அச்சுறுத்தும் பாசிச பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் நடவடிக்கை களை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோவை உக்கடம் பேருந்து நிலையம்  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று உரை யாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள், ஜனநாயக உரிமைகளுக்காக போரா டும் மக்களை புல்டோசர் வைத்து ஒடுக்காதே, சிறுபான்மை மக்கள் நலன்களை சிதைக் காதே, ஜனநாயக உரிமைகளை, வாழ்வாதா ரத்தை அழிக்காதே உள்ளிட்ட கோரிக்கை களை முழக்கங்களாக எழுப்பினர். இதில், சிபிஎம் கோவை மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.எஸ்.கனகராஜ், யு.கே.சிவஞானம், வி. ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.