கோவை, ஆக.2- தங்களது குழந்தைகளை பிற மாணவர்க ளோடு ஒப்பிடக்கூடாது என பெற்றோர்க ளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை - அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு மாணவர்களி டையே உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், தந்தை பெரியார் வந்து சென்ற ஒரு பள்ளிக்கூடம் இது. ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதம் பாடிய பள்ளி இது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோரால் பாராட்டு பெற்ற ஒரு பள்ளிக்கூடம் இது. 1921 ஆம் ஆண்டு பீளமேடைச் சேர்ந்த மக்க ளின் கோரிக்கையின் அடிப்படையில் உரு வாக்கப்பட்டது தான் இந்த பள்ளி. இப் படிப்பட்ட பெருமைமிக்க பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பெருமையாக நினைக்க வேண்டும். பீளமேடு பகுதியைச் ஒரு முக்கியமான பகுதியாக மாற்றி காட்டி யது கல்வி நிலையங்கள் தான். அந்தந்த காலங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடங் களை நடத்த வேண்டும். தொழில் நிறுவ னங்களுக்கு ஒரு நல்ல மனிதர்களை அளிப் பது எதுவென்று கூறினால், அது எங்கள் பள்ளிக்கல்வித்துறை தான். அகாடமிக் சார்ந்த பாடங்களை மட்டுமல்லாமல் மாண வர்களை அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்லக்கூடிய பாடங்களையும் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் முன் வைக்கிறேன். மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் என பெற்றோர்களிடம் கேட் டுக்கொள்கிறேன். பிள்ளைகளுடைய தனித் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பது தான் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாக பார்க்கிறேன். மாணவர்களாகிய நீங்கள், உங்களுடைய பெற்றோர், ஆசிரியர் என்ன அறிவுரை கூறு கிறார்களோ, அதனை மனதில் வைத்து கொண்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். நம்முடைய ஆசிரியர், பெற்றோருக்கு பெரு மையை தேடி தர வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், பிஎஸ்ஜி கல்விக் குழுமத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.