சேலம், பிப்.12- அடிப்படை வசதி எதுவும் செய்து தராமல் பாராபட்சம் பார்க்கும் அதி முக ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து, திமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 4 பேர் ராஜி னாமா செய்வதாக ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டிணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் தியாகராஜன், வளர்மதி, கவிதா பழனியப்பன், அனு சியா பாஸ்கரன் ஆகியோர் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு வந்தனர். இதன்பின் ஆட்சி யரை சந்தித்து புகார் மனு அளித்து விட்டு, செய்தியாளர்களிடம் பேசுகை யில், மேட்டுப்பட்டி பஞ்சாயத்தில் 7 திமுக வார்டு உறுப்பினர்களும், மூன்று அதிமுக உறுப்பினர்களும் உள்ளனர். தலைவராக சந்திரா என்ப வர் உள்ளார். எங்கள் பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எங் கள் வார்டு பகுதிக்கு குடிநீர், சாலை வசதிகள் செய்து தரக்கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலை வர் சந்திராவிடம் கேட்டு வந்தோம். ஆனால், திமுக வார்டு உறுப்பினராக இருப்பதால் எங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரா மல், பாரபட்சம் செய்கிறார். மேலும், ஊராட்சி தலைவரின் கணவர் ராஜ சேகர் தலையீடு அதிகமாக உள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு சரிவர பதில ளிக்காமல் ஏளனமாக பேசுகின்றனர். அரசு பணிகள் ஏதாவது தொடங்கி னால் உறுப்பினர்களான எங்களுக்கு எந்தவொரு தகவலும் தராமல் ஒரு தலைபட்சமாகவே செய்து முடிக் கின்றனர். இதனால் எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. வார்டு உறுப்பின ராக இருந்தும் எதுவும் செய்ய முடி யாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு, எங்கள் பகுதி மக்க ளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவிட வேண்டும். அவ்வாறு நட வடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் வார்டு உறுப்பினர் பதவியை ராஜி னாமா செய்து விடுவோம், என்ற னர்.