கோவை, ஜூலை 27- தமிழ்நாட்டை புறக்கணித்து நிதிநிலை அறிக்கையை தாக் கல் செய்த ஒன்றிய அரசைக் கண்டித்து, மாநிலம் முழுவ தும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கு முறையாக நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து, மாநிலம் முழுவதும் திமுகவினர் சனியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக கோவை டாடா பாத் பவர் ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்திற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ராஜ்குமார் தலைமை வகித்தார். இதில் திமுக மாவட்டச் செயலா ளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி.முருகேசன், முன் னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, துணைமேயர் வெற்றிச்செல்வன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு இதைபோன்று ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி.செல்வராஜ், ஈரோடு மாநகரச் செயலாளர் மு.சுப்ரம ணியம் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். உதகை நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக மாவட்டச் செயலாளர் பா.மு.முபா ரக் தலைமை வகித்தார். அந்தியூர் செல்வராஜ் எம்.பி., திமுக மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் ஜார்ஜ், ராஜேந்திரன், உதகை நகர்மன்றத் தலைவர் வாணீஸ் வரி, கூடலூர் நகர்மன்றத் தலைவர் பிரமிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.