districts

பாஜக நிர்வாகி மீது நடவடிக்கைக் கோரி திமுக மனு

அவிநாசி, ஜன.12- முறைகேட்டில் ஈடுபட்ட பாஜக வைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலி யுறுத்தி அமைச்சரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றி யம், புதுப்பாளையம் ஊராட்சி மன்றத்  தலைவராக செயல்பட்டு வந்த பாஜ கவைச் சேர்ந்த கஸ்தூரி பிரியா, பல் வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள் ளார். குறிப்பாக, சமுதாய நலக்கூடத் தில் காவலாளி நியமித்ததில் முறைகேடு  செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து அமைச்சரிடம் புகார் தெரிவித்த தன் பேரில், மாவட்ட நிர்வாகம் தணிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதில், ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் ஊழல் நடைபெற்றது உறுதியாகியுள்ளது. ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்தவித  நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இதனிடையே, ஜன.5 ஆம்  தேதியுடன் பதவிக்காலம் நிறைவ டைந்து விட்டது. மேலும், கஸ்தூரி பிரியாவின் கணவர், ஊராட்சி நிர்வா கத்தில் தலையீடு செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதுகுறித்து வட் டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார்  தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, பாஜகவைச் சேர்ந்த  கஸ்தூரி பிரியா மற்றும் அவரது கண வர் மீதும், இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வா கத்திற்கு பரிந்துரை செய்யுமாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் திமுக  நிர்வாகிகள் மனு அளித்தனர்.