ரூ. 2.40 கோடிக்கு பருத்தி ஏலம்
தாராபுரம், மே 23- திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைகூட முதுநிலை செய லாளர் சுரேஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற் பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. அதிக பட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 8 ஆயிரத்து 276 க்கும், குறைந்தபட்ச விலை யாக ரூ. 6 ஆயிரத்து 200க்கும், சராசரி விலை யாக ரூ. 7 ஆயிரத்திற்கும் விலை ஆனது. மொத்தம் 10 ஆயிரத்து 759 மூட்டைகள் 3 ஆயி ரத்து 445 குவிண்டால் பருத்தி ரூ. 2 கோடியே 39 லட்சத்து 23 ஆயிரத்து 920 க்கு விற்பனை யானது. இந்த ஏலத்தில் 29 வணிகர்கள் பங் கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண் காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட திமுக முடிவு
திருப்பூர் மே 23 - தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், டாக்டர் கலைஞர் நூற் றாண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவது என திருப் பூர் வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய் துள்ளது. திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் க.நடராஜ் தலைமையில் அக்கட் சியின் மாவட்ட அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் வளா கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற் றாண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுவது எனவும், உடன்பிறப்புகளாய் இணைவோம் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது எனவும், ஜல்லிக்கட்டு மீட் டுத்தந்த தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக செய லாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு.நாகராசன், வடக்கு மாநகர செய லாளர், திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் குமார், நந்தினி, டிஜிட்டல் சேகர், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:26.38/60அடி நீர்வரத்து:2கன அடி
வெளியேற்றம்:27கன அடி
அமராவதி அணை நீர்மட்டம்:62.77/90அடி
நீர்வரத்து:183கனஅடி
வெளியேற்றம்:13கன அடி
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
நாமக்கல், மே 23- ஜூன் மாதம் பள்ளிக் கல்வி நிறுவனங்கள் துவங்க உள்ள நிலையில், தனியார் பள்ளி, கல்லூரி வாகனங் கள் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகின்றனர். அதன் படி நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவன வளாகத்தில், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத் திற்குட்பட்ட 31 பள்ளிக்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 397 வாகனங்கள் தணிக்கை செய் யப்பட உள்ளன. இதில் செவ் வாயன்று 253 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் குறைபாடு உள்ள 23 வாகனங்கள் கண்டறியப் பட்டன. இந்த வாகனங்களை ஒரு வாரத்திற்குள் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது. குறிப் பிட்ட காலத்திற்குள் சரி செய்யவிட்டால், அந்த வாக னங்கள் இயங்க அனுமதிக் கப்படாது என வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா தெரிவித்தார். இந்த ஆய் வின்போது வட்டார போக்கு வரத்து அலுவலர் சரவணன், திருச்செங்கோடு காவல் ஆய் வாளர் செந்தில்குமார், மோட் டார் வாகன ஆய்வாளர் பாம பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறைதீர் கூட்டம்'
சேலம், மே 23- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அறை எண்:215ல், மாதாந்திர விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட் டம் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் மற் றும் விவசாய சங்க பிரதிநிதி கள் இக்கூட்டத்தில் பங் கேற்று, குறைகளை தெரி விக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார் மேகம் தெரிவித்துள்ளார்.