districts

img

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்

திருப்பூர், செப்.27- திருப்பூர் மாவட்டம், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலை யத்தில் தீபாவளி 2024 முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்ப னையை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெள்ளின்று துவக்கி வைத்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரி வித்ததாவது, தமிழக அரசின் கூட்டுறவு  நிறுவனமான கோ- ஆப்டெக்ஸ் கடந்த 89 வருடங்களாக தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளில் தமிழக நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்ப டும் ரகங்களை கொள்முதல் செய்து, இந்தியா முழுவதும்  உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை  நிலையங்கள் மூலம் சந்தைபடுத்தி வருகிறது. மேலும், நெசவாளர்களுக்கு தொடர்  வேலைவாய்ப்பு  தந்து, வாழ்வாதரத்தை மேம்படுத்தி வரு கிறது. தீபாவளி 2024 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்க ளுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களி லும் 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும்,  இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ்  புதிய விற்பனை நிலையம் மற்றும் உடுமலைபேட்டையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம்  ரூ.1.15 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (கைத்தறித்துறை) அ.வே.கார்த்திகேயன், மண்டல மேலாளர் ப.அம்சவேணி, கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்) கோ.ஜெகநாதன் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற் பனை நிலையம் மேலாளர் எஸ்.பிரபு, கோ-ஆப்டெக்ஸின் வாடிக்கையாளர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.