கோவை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை பயனடைய செய்து சிறப்பான முறையில் பணியாற்றிய மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா மற்றும் துறை அலுவலர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். கோவை விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் நா.முருகாளந்தம், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.