districts

img

தருமபுரி: விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வட்டாட்சியர் மரணம்

தருமபுரி, பிப்.20- தருமபுரியில் ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டியில் கலந்துக்கொண்டு விளையாடிய வட்டாட்சியர் அதியமான் மாரடைப் பால் காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டுப் போட்டி கள் நடைபெற்று வருகிறது. திங்களன்று நண்பகல் நடை பெற்ற இறகுப்பந்து போட்டியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகள் முகாம் வட்டாட்சியராக பணி யாற்றி வந்த அதியமான் கலந்துக்கொண்டு போட்டியில் விளையாடினார். விளையாடிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மார டைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவ ருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அதியமான் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். விளையாட்டு போட்டியின் போது  வட்டாட்சியர் உயிரிழந்த சம்பவம் அரசு அதிகாரிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.