நாமக்கல், ஜன.28- நாமக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற் றும் கண்காணிப்புக்குழு கூட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (DISHA) கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, குழுவின் தலைவரும், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.எஸ்.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். குழுவின் உறுப்பி னர் செயலரும், மாவட்ட ஆட்சியருமான ச.உமா, இணைத் தலைவர்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., அவர்கள், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய, மாநில அரசு மற்றும் நகராட்சி நிர்வாகம், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பணிகள் அனைத்தும் திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்கப்பட வேண்டும், என குழுவின் தலைவர் மாதேஸ்வரன் எம்.பி., தெரிவித்தார். இக்கூட் டத்தில், குழுவின் உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ, கு.பொன்னுசாமி எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், மாநக ராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளர் க.பா.அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.