districts

img

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் சாம்பியன்

அவிநாசி, ஜன.2- திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற மாவட்ட அளவி லான கராத்தே போட்டியில், பெரியாயிபாளையம் திருவள்ளு வர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர். திருப்பூர் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி திரு முருகன்பூண்டியில் நடைபெற்றது. அரசு, மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் பங் கேற்றனர். இதில் பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஒட்டு மொத்த  சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர். முன்னதாக, வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சி ஆசிரியர்கள் சசிக் குமார், அவிநாசிலிங்கம் உள்ளிட்டோருக்கு தலைமையாசிரி யர் வி.குமேரசன், பள்ளி வளர்ச்சிக்குழுத் தலைவர் கே. அண்ணாத்துரை, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.