திருப்பூர், ஆக.10 தமிழ்நாடு நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியத் தின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணி களை மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் சனியன்று ஆய்வு மேற்கொண்டு, பணி களை விரைந்து முடிக்க அறி வுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, திருப்பூர் தெற்கு வட்டத்திற்குட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.20.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் கந்தம்பாளை யத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு பூமிதான வாரிய நிலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், குண் டடம் ஊராட்சி ஒன்றியம், எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி, பங்காம்பாளையத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.3.50 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கான பணிகள் மற்றும் எல் லப்பாளையம் புதூர் ஊராட்சி, சக்தி விநாயக புரத்தில் ரூ.55 ஆயிரம் மதிப்பீட்டில் ஊரக வீடு கள் பழுது பார்க்கும் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கெள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, குண்டடம் நெடுஞ்சாலையில் தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண் டும், தாராபுரம் வட்டம், பெரிய குமாரபாளை யம் எரக்காம்பட்டி ஆகிய இடங்களில் பூமி தான நிலங்களில் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. மேலும், நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இவ் ஆய்வின் போது, தாராபுரம் வரு வாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறிய ளார் ராணி, உதவி செயற்பொறியாளர் (தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) அன்பழகன், உதவி பொறியாளர் சர்மிளா, தாராபுரம் வட்டாட்சியர், கேவிந்தராஜ், திருப் பூர் தெற்கு வட்டாட்சியர் தேவராஜ், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.