ஈரோடு, டிச.8- அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணையில் மாவட்ட ஆட்சியர் ராஜகோ பால் சுன்கரா ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட் டம், பர்கூர் காப்புக்காட்டு பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள் ளது. இந்த அணையானது அந்தியூரிலி ருந்து பர்கூர் செல்லும் சாலையில் சுமார் 13 கி.மீ. தொலைவில் வனப்பாதுகாப்பு பகுதிக்குள் அமைந்துள்ளது. வரட்டுப் பள்ளம் நீர்த்தேக்கம் 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1980 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு நீர்பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது. இது கல்லுப்பள்ளம், கும் பரவாணிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகிய 3 காட்டாறுகளின் குறுக்கே கட் டப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 139.60 மில்லியன் கன அடியாகும். அணையின் மொத்த உயரம் 33.46 அடி ஆகும். தற்போதைய நீர் மட்டம் 32.05 அடியாகவும் உள்ளது. அணைக்கு 230 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. வரட்டுப்பள்ளம் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி வெளியேறும் உபரிநீர் இடதுபுற வழிந்தோடியின் வழி யாக கெட்டிசமுத்திரம் ஏரியை சென்ற டைகிறது. அணையின் வலதுபுற வழிந் தோடியின் வழியாக வெளியேறும் உபரி நீர் அந்தியூர் ஏரி, பிரம்மதேச ஏரி, வேம் பத்தி ஏரி மற்றும் ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகளை சென்றடைகிறது. கெட்டி சமுத்திரம் ஏரியின் உபரிநீர் அந்தியூர் ஏரியை சென்றடைந்து, அதன் கீழ் உள்ள அமைப்புமுறை ஏரிகளான பிரம்ம தேசம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும் ஆப்பக் கூடல் ஆகிய ஏரிகளை சென்றடைந்து இறுதியில், பவானி ஆற்றில் கலக்கி றது. முன்னதாக, இந்த அணையைப் பார் வையிட்ட மாவட்ட ஆட்சியர் ராஜகோ பால் சுன்கரா, கெட்டிசமுத்திரம் ஏரி யினையும் பார்வையிட்டு அதன் நீர்வ ரத்து குறித்து துறை அலுலவர்களிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து செலம்பூர் அம்மன் கோயில் பள்ளம், பாலம் கனமழையினால் பழுதடைந்துள் ளதையும் ஆட்சியர் பார்வையிட்டு, பாலம் சீரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார். இந்த ஆய்வின்போது, அந் தியூர் வட்டாட்சியர் பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுலவர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.