districts

img

50 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றை கொண்ட கோவை கோவில்பாளையம்

அன்னூர் அருகே உள்ள கோவில்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி யில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரம் ஆண்டுகால வர லாற்றை கொண்ட கோவை கோவில்பாளையம் சாம்பல் மேட்டை பாதுகாக்க வேண்டும், அகழாய்வு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மத்திய  பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசி ரியர் ரவி கூறுகையில், கோவை மாவட் டம், அன்னூர் வட்டத்துக்குட்பட்ட கோவில்பாளையம், சர்க்கார் சாமக் குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கவையன்புத்தூர் தமிழ்ச்சங்க பொதுச்செயலர் கணேசன், தொழில் நுட்பவியலாளர் சரவணன், கல்வெட் டியல் முன்னாள் மாணவர்கள் பால கிருஷ்ணன், மணிகண்டன், மேகலா, சிஐடி தொழில்நுட்ப உதவியாளர் ஹரிஹரபுத்திரன் ஆகியோர் கடந்த  ஆக.21 ஆம் தேதியன்று மேற்பரப் பாய்வு நடத்தினர். திருநீற்றுமேடு, பூதிமேடு, நத்தமேடு என்றழைக் கப்படும் சாம்பல் மேட்டுப்பகுதியை மேற்பரப்பாய்வுக்கு உட்படுத்திய தில், இதற்கு முன்பு அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைக்காத, வரலாற்றுக் கால மனிதர்கள் பயன் படுத்திய கல் ஆயுதங்கள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள், குறி யீடுகள் பொறிக்கப்பட்ட ஓடுகள், கருப்பு - சிவப்பு மட்கல ஓடுகள், அவற்றின் சிதைந்த பகுதிகள் உள் ளிட்டவை கிடைத்துள்ளன. சிறுவர்கள் விளையாடப் பயன் படுத்திய வட்டச்சில்லுகள்,

சங்கு வளையல்கள், குறியீடுகள் பொறிக் கப்பட்ட ஓடுகள், வேலைப்பாடுகளு டன் கூடிய சிவப்புக் கருப்பு மட்கல ஓடு கள், நெசவு நெய்தலில் போது கரடு முரடாக இருக்கின்ற நூல்கள் வழு  வழுப்பூட்டுவதற்காகப் பயன்படுத் தப்பட்ட வழு வழுப்பான கற்கள்,  இரும்பு ஆயுதம், இரும்புக் கசடு கள், மணிகள் செய்வதற்குப் பயன் படுதப்படுகிற வெள்ளைப்பளிங்கு அகேட் வகை மூலக் கற்கள், இடைக் காலச் சற்று அகலமான செங்கற்கள் என பல கிடைத்திருக்கின்றன.  இதன் மூலம் இப்பகுதி மக்கள் மட்கலத் தொழிலில் மேம்பாடு, சங்கு வளை யல் செய்யும் தொழில், இரும்புக் கரு விகளை உருவாக்கும் தொழில் என தொழில் வளம் பெற்றவர்களாகவும், நாகரீக காலத்திலும், இடைக்காலத் திலும் விளங்கி இருக்கின்றனர் என் பதை அறிய முடிகின்றன. இளை ஞர்கள் விளையாடுவதற்குப் பயன் படுத்திய வட்டச்சில்லுகள் கிடைத் திருப்பதால் கால்நடைச் சமுதாய காலத்திற்குப் பிறகு நாகரீகப் பண் பாட்டுக் காலத்தில் மக்கள் நிலை யான குடியிருப்பை அமைத்துக் கொண்டு அவ்விடத்தில் வாழ்ந்தி ருப்பதை அறிய முடிகிறது. இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதி யில் மனிதர்கள் வாழ்ந்தது உறுதி செய்யப்படுகிறது. சாம்பல்மேடு என் பது கால்நடைகளைத் தொழிலாகக் கொண்டு பழங்கால நாடோடி மக்கள் வாழ்ந்து வந்ததற்கான இடமாகக் கருதப்படுகிறது. 

திருநீற்றுமேடு

கால்நடைச் சாணத்தை இக்கால மக்கள் மற்றொரு இடத்திற்கு செல்லு முன் எரியூட்டிவிட்டுச் செல்லுவர்.  இதில் தமது கால்நடைகளை ஓட்டி விடுவது வழக்கமாக இருந்திருக் கிறது. கால்நடைகள் நோயின்றி வாழ் வதற்கான நம்பிக்கை உலகம் முழு வதும் இச்சமுதாய மக்களிடம் இருந் திருக்கிறது. இந்த எறியூட்டப்பட்ட சாண மேட்டுப்பகுதி இடைக்காலத் தில் பூதிமேடு என்றும் திருநீற்றுமேடு என்றும் நத்தக்காடு என்றும் அழைக் கப்படுகின்ற வழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கின்றன. அருகில் உள்ள கோயில்களுக்கு இந்தத் திருநீற்று மேடு  என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் இருந்துதான் திருநீறு எடுத் துச்செல்லப்பட்ட தகவலை இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

 இதன் அருகிலுள்ள காலகாலேஸ் வரர் கோவில் கல்வெட்டுகள் கொங்கு சோழர், கொங்கு பாண்டியர்கள் இப் பகுதியை ஆட்சி செய்ததை உறுதிப் படுத்துகின்றன. கலிமூர்க்க விக்கிரம சோழனுடைய கல்வெட்டு ஒன்றை காலிங்கராயன் குளக்கரையில் (கோவில்பாளையம்) அண்மையில் கண்டுபிடித்தோம். அக்கல்வெட்டு இப்பகுதியைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வட கொங்கு பகு தியை ஆட்சி செய்த ஒரே கொங்கு சோழன் அவர் என்பதையும் உறுதிப் படுத்தி இருக்கிறோம். இந்த ஆய்வில் கிடைத்த பொருள்களின் மூலம் இப் பகுதி மக்கள், மட்கலத் தொழில், சங்கு வளையல் செய்யும் தொழில், இரும்புக் கருவிகளை உருவாக்கும் தொழில்களில் வளம் பெற்றவர்க ளாக விளங்கி இருக்கின்றனர் என் பதை அறிய முடிகிறது. கற்கால மக்களும், அதனைய டுத்து நாடோடி இனக்குழு மக்களும் சங்க காலம், அதற்குப் பிற்பட்ட இடைக் கால மக்களும் வாழ்ந்ததற்கான தட யங்கள் கிடைத்திருப்பதன் மூலம் கோவில்பாளையம் சாம்பல் மேட் டுப்பகுதி முக்கியத்துவம் பெறுகிறது. இதனை அரசு அகழாய்வு செய்யுமே யானால் சங்ககால மக்கள் வாழ்ந்த தற்கான தடயங்கள் ஏராளமாக கிடைக் கும் என்பதில் ஐயமில்லை. தொடர்ச் சியாக சுமார் 50 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை உடைய கோவில்பாளை யத்தைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.  இப்பகுதியை, அரசு அகழ்வாய்வு செய்யுமேயனால் சங்க கால மக்கள் வாழ்ந்தற்கான தடயங்கள் ஏராளமாக உறுதியாகக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.