districts

அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து 100 ஆவது நாளாக உபரி நீர் வெளியேற்றம்

உடுமலை, நவ.30- உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில்  தொடர் மழை பெய்வதால், அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரு கிறது. இதைதொடர்ந்து சனியன்று 100  ஆவது நாளாக உபரி நீர் வெளியேற்றப் பட்டது. உடுமலை அமராவதி அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட் டத்தில்  54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெற்று வருவதுடன், ஆற் றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர்  ஆதாரமாகவும் உள்ளது. இந்த அணை யில் இருந்து கடந்த மாதம் பழைய  ஆயக்கட்டு மற்றும்  புதிய ஆயக்கட்டு  பாசன நிலங்களில் உள்ள நிலைப்பயிர் களை காப்பதற்காகவும், பொதுமக்க ளின் குடிநீர் தேவைக்காகவும் அணை யில் இருந்து உபரி தண்ணீர் திறக்கப் பட்டது. இந்நிலையில், அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவ  மழை தீவிரமடைந்துள்ளதால், அணை யின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு  கொள்ளளவை கடந்த மாதம் எட்டியது. கடந்த இரண்டு வார காலமாக கேர ளாவிலுள்ள மூணாறு, தலையாறு, மறையூர் பகுதியில் கனமழை பெய்து அணையின் பிரதான நீர்வரத்து ஆறான  பாம்பாற்றின் மூலம் அணைக்கு நீர்வ ரத்து தொடர்ந்து அதிகத்து வருகிறது.மேலும் சனிக்கிழமை காலை நிலவரப் படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 688 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 90 அடியில் 88.09 அடியாக உள் ளது. இதனால் அணையின் பாதுகாப்பு  கருதி 784 கன அடி நீர் புதிய மற்றும்  பழைய ஆயக்கட்டு விவசாய நிலங்க ளுக்கு பயன்படும் வகையில் பிரதான கால்வாய் மற்றும் ஆற்றில் தண்ணீர் திறக்கபட்டு வருகிறது. மேலும் அணை யின் நீர் பிடிப்பு பகுதிகளில் 6 மில்லி மீட்டர் மழை பெய்து வருகிறது.