districts

img

இலவச வீட்டுமனை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

சேலம், மார்ச் 8- இடம், வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச  வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மாற்றுத்திற னாளிகள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டத்தில் இடம், வீடு இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். 100  நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை  முழு ஊதியம் வழங்க வேண்டும். பணித்தள பொறுப்பாளர் களாக மாற்றுத்திறனாளிகளின் நியமனம் செய்ய வேண் டும். மாற்றுத்திறனாளிகள் ரேசன் அட்டைகளை ஏஏஒய்  கார்டாக மாற்றித்தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளின்  நலன் சார்ந்த பிரச்சனைகளை விவாதிப்பதற்கும், அவர்களின்  குறைகளை கேட்டு அறிந்து தீர்வு காண மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு தொண்டு நிறுவனங்களை மட்டுமே அழைக்கும் போக்கு  தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே, மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் நிர்வாகிகளை அழைக்க வேண்டும், உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தினர் சனியன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். இந்நிகழ்வில், சங்கத்தின் மாநி லத் தலைவர் வில்சன், மாவட்டச் செயலாளர் எம்.குணசேக ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.