districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்க அமைப்பு கூட்டம்

பள்ளிபாளையம், மே 30- பள்ளிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைக்கப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள  பள்ளிபாளையத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க புதிய கிளை அமைப்பு கூட்டம் வெடியரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு சங்க நிர்வாகி கனகவல்லி தலைமை வகித்தார். இதில் தாலுகா துணைச்செயலாளர்கள், அர்ஜூனன், அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவராக கணேசன், செயலாளராக கனகவல்லி, பொருளாளராக வைஷ்ணவி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.