நாமக்கல், பிப்.7- வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாற்றுத்திற னாளிகள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு. வீடு இல் லாத மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு இலவச வீடு வழங்க வேண்டும், வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக தொழில் செய்ய அனைத்து வங்கி கிளைகளும் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்க வேண்டும், இலவச பேருந்து அட்டை, இலவச ரயில் அட்டை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து பேரூராட்சி களிலும் 100 நாள் வேலைத்திட்டத்தை அமல் படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட அமைப் பாளர் எம்.ஆர்.முருகேசன் தலைமை வகித் தார். இதில், அமைப்பின் மாநிலச் செயலாளர் டி.ராஜேஷ், சங்க மூத்த தலைவர் ஏ.ரங்க சாமி, தாலுகாத் தலைவர்கள், மாதேஸ்வரன் (மோகனூர்), சுந்தர் (ராசிபுரம்), துரைசாமி (திருச்செங்கோடு), அர்ஜுனன் (குமாரபா ளையம்), ரமேஷ் (சேந்தமங்கலம்), சந்திர சேகரன் (கொல்லிமலை), குணசேகரன் (பரமத்தி வேலூர்) உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகளும் பாதுகாவலர்களும் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட் டது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.