districts

img

பழுதான மின் கம்பங்கள்: குளுகோஸ் ஏற்றும் போராட்டம்

அவிநாசி, டிச. 25- அவிநாசி அருகே ஆட்டையாம் பாளையம் பகுதியில் மின்கம்பத்தை சீரமைக்காத மின்சார வாரியத்தை கண்டித்து, மின் கம்பங்களுக்கு குளுகோஸ் ஏற்றும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்த நிலை யில், மின்கம்பங்கள் மாற்றி அமைக் கப்பட்டுள்ளது.  அவிநாசி ஒன்றியம், வேலாயுதம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டையாம்பாளையம், பாரதி நகர்  பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இப்பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இதில்  பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் பழுதடைந்தும், மின்சார கம்பிகள் தாழ்வாக செல் கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை ஏற் பட்டது. இதனை சீரமைத்து தரு மாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் பலமுறை மனுக்கள் கொடுத்தும், மின்சார வாரியம் எவ் வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அக்.28ஆம் தேதி யன்று மின்சார வாரிய அதிகாரி களிடம் மனு கொடுத்த நிலையில், அதிகாரிகள் பழுதடைந்த மின் கம்பங்களை பார்வையிட்டு சென் றனர். இந்நிலையில், ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையிலும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும், தொழிற்சாலைகளுக்கும் மின் பற்றாக்குறை ஏற்படுகிறது.   இதனையடுத்து, புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும். பழுத டைந்த மின் கம்பங்களை மாற்ற  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி ஆட்டையாம் பாளையம் கிளை சார்பில், டிச.26 ஆம் தேதியன்று மின் கம்பங்களுக்கு  குளுகோஸ் ஏற்றும் போராட்டத்தை    நடத்தப் போவதாக அறிவிப்பு வெளி யிட்டது. இதையறிந்த மின்சார வாரியம் பழுதடைந்த மின் கம்பங் களை உடனடியாக மாற்றி அமைத் தனர். மேலும் புதிய மின் மாற்றி களை அமைக்க சில தினங்கள் அவ காசம் கேட்டதை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்துள்ளது.