தருமபுரி, டிச.8- நல்லம்பள்ளி அருகே நடைபா தையை குழி தோண்டி அடைத்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னை நகர், சேலம் - தருமபுரி சாலையில் டாட்டா நகருக்கு எதிரே உள்ளது. இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியாரிடம் வீட்டுமனைகள் வாங்கி வீடு கட்டி குடியிருந்து வரும் நிலையில், 30 ஆண்டுகள் கழித்து குடியிருப்பு வீடுகளுக்கு சாலை வசதி வேண்டுமென்றால் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். பணம் கொடுத்தால் மட்டுமே பஞ்சாயத்து நிர்வாகத் திடம் உங்களுக்கு உரிய சாலையை கிரயம் செய்து ஒப்ப டைக்க முடியும் என்று சிலர் மிரட்டி வருவதால், இதுகுறித்து அப்ப குதி மக்கள் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை முறையிட்டுள்ளனர். மேலும், இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் கழிவுநீர் செல்வதற்கு வழியின்றி முக்கிய சாலையான சேலம் தரும புரி சாலை ஓரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதேபோல் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கு தெரு கொட்டாவூர் வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு கழிவு நீர் கால்வாய் வசதிகள் இல்லாத தால் இந்த முக்கிய சாலை ஓரத் தில் இருக்கும் பொதுமக்கள் பயன் படுத்தும் கழிவு நீர் சாலை ஓரத்தில் தேங்கி நின்று தொற்றுநோய் பரவும் அவல நிலை உள்ளது. இந்நிலை யில், அடையாளம் தெரியாத நபர் கள் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி அன்னை நகருக்கு செல்லும் பாதையை அடைத்துள் ளனர். இதனால் அன்னை நகரில் இருந்து செல்லும் பள்ளி குழந்தை கள், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அத்தியாவாசிய தேவைகளுக்காக பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் செல்வ தற்கு வழி இன்றி 2 நாட்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுசம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆவேசம டைந்த அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது, நடைபாதையை அடைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பாதை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.