திருப்பூர், ஏப்.22- புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தேசிய பென்சனர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய வளாகத்தில் வெள்ளியன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராஜேந்திரன் தலைமை ஏற்றார். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் கிளை செயலாளர் கே.விஸ்வநாதன் வரவேற்றார். தமிழக அரசு ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஜி. சண்முகம், பிஎஸ்என்எல் ஓய்வூதிய அமைப்பின் மாவட்ட செயலாளர் சௌந்தர பாண்டியன், முன் னாள் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவி செயலா ளர் சுப்பிரமணியம், சிஐடியு மாவட்ட துணை தலைவர் உன்னி கிருஷ்ணன், காவலர் ஓய்வூதியர் சங்கத்தின் ஆர்.ஜெயராமன் வாழ்த்துரை வழங்கினர். மகுடேஸ்வரன் தர்ணா போராட் டத்தை நிறைவு செய்தார்.