districts

img

ஈரோடு ரயில் நிலையம் முன்பு தர்ணா

ஈரோடு, ஜூலை 17- பணியிட மாறுதல் உத்தரவு பெற்றவர்களை அனுப்பி வைக்க வலியுறுத்தி அகில இந்திய ஓடும் தொழிலாளர் கழ கத்தினர் ஈரோடு ரயில் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்ட னர். இடமாறுதல் உத்தரவு பெற்றுள்ள தொழிலாளிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். பெண் ஓட்டுநர் களுக்கு ஓய்வு அறை மற்றும் பிரசவ கால விடுப்பு உள் ளிட்டவை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அகில இந்திய ஓடும் தொழிலாளர் கழகத்தின் சார்பில் ஈரோடு ரயில் நிலையம் முன்பு தர்ணா நடைபெற்றது. கிளை  செயலாளர் யு.சிவகுமார் தலைமை வகித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தொடங்கி வைத்தார். ரயில்வே ஓய்வூதியர் சங்கத்தின் சேலம் கோட்ட  செயலாளர் சி.முருகேசன், ஏஐஎல்ஆர்எஸ்ஏ நிர்வாகிகள் பாபு ராஜன், ஜி.சுப்ரமணி, டிஆர்இயு உதவி பொதுச்செய லாளர் கே.பிஜூ ஆகியோர் சிறப்புரையாற்றினார். தர்ணாவில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.