districts

img

அக்.4 முதல் 14 ஆம் தேதி வரை தருமபுரி புத்தகத் திருவிழா

தருமபுரி, செப்.20- தருமபுரி புத்தகத் திருவிழா அக்.4 முதல் 14 ஆம் தேதி வரை  நடைபெற உள்ளதென மாவட்ட ஆட் சியர் கி.சாந்தி அறிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேர வையும் இணைந்து நடத்தும், 2024  ஆம் ஆண்டிற்கான புத்தகத் திரு விழா மதுராபாய் திருமண மஹா லில் அக்.4 முதல் 14 ஆம் தேதி  வரை நடைபெற உள்ளது. இதற் கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலைமை வகித்து  ஆட்சியர் கி.சாந்தி பேசுகையில், தருமபுரி மாவட்ட மக்கள் கல்வி,  வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம டைய, அவர்களிடையே வாசிப்பு  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்து வது மிகவும் அவசியமாகிறது. அவ் வகையில் மாவட்ட நிர்வாகம் மாவட் டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள மக்களிடையேயும் புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, அங்கிருந் தும் மாணவர்கள் புத்தகத் திருவிழா வைக் காண்பதற்கான ஏற்பாடுக ளைச் செய்து வருகிறது. மதுரா பாய் திருமண மஹாலில் அக்.4 முதல் 14 ஆம் தேதி வரை நடை பெற உள்ள, புத்தகத் திருவிழா வில் தமிழகத்தின் முன்னணிப் பதிப் பாளர்கள், நூல் விற்பனையாளர் கள் பங்கேற்று இலக்கியம், வர லாறு, மானுடவியல், அரசியல், சூழ லியல், நலவாழ்வு உள்ளிட்ட பல் வேறு பொருள்கள் பற்றிய புத்த கங்களும், சிறுவர்களுக்கான நூல் களும் இடம்பெற உள்ளன. எனவே, புத்தகத் திருவிழாவில் தருமபுரி  மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல் லூரி மாணவ, மாணவியர்கள், போட் டித்தேர்விற்கு தயாராகும் மாணவர் கள் மற்றும் பொதுமக்கள் அதிகள வில் கலந்து கொள்ள வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி) கௌரவ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட வருவாய் அலுவலர் (தனி)  பூங்கோதை, தருமபுரி தகடூர் புத்த கப் பேரவை செயலாளர் இரா.செந் தில், தலைவர் சிசுபாலன், பொரு ளாளர் எம்.கார்த்திகேயன், ஒருங் கிணைப்பாளர் தங்கமணி, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.