districts

img

தருமபுரி: மின் இணைப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு

தருமபுரி, பிப்.28- விருப்பாச்சிபுரத்தில் இலவச மனைபட்டாவுக்கான இடத்தில் வீடு கட்டி குடியிருப்போருக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்த னர். தருமபுரி அருகே விருப்பாச்சிபுரம் நந்தி நகரில் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு கடந்த 2002 ஆம்  ஆண்டு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறையின் மூலம், அரசு சார்பில் தலா 3 சென்ட் வீதம் 76 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட் டது. இந்த இடத்தில் பட்டாதாரர்கள் வீடு கட்டி குடி யிருந்து வருகின்றனர். ஆனால், மின் இணைப்புக்கு விண்ணப்பித்தும் பல காரணங்களை காட்டி காலம் தாழ்த்தி வருகின்றனர்.  இந்நிலையில், வீடுகளுக்கு மின் இணைப்பு இல் லாததால், இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து விடு கிறது. எனவே, மின் இணைப்பு உடனடியாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நந்தி நகர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.