districts

எலிகளின் பிடியில் தருமபுரி அரசு மருத்துவமனை: மக்கள் அச்சம்

தருமபுரி, டிச.18- தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் சுற்றித்திரி யும் எலிகளால் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை, சேலம் - தரும புரி முக்கிய சாலையில் உள்ளது.  மாவட்ட தலைமை மருத்துவமனை யாக இருந்த இந்த மருத்துவமனை, 2008 ஆம் ஆண்டு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையாக தரம் உயர்த் தப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந் தும் மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பத் தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இருந்தும் சிகிச் சைக்காக தினந்தோறும் ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வந்து செல்கின்ற னர். மேலும், உள்நோயாளிகளாக ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்டிற்கு 40 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக வந்து செல்கின்றனர். மாதத்திற்கு  சராசரியாக ஆயிரம் பிரசவங்கள்  நடைபெறுகின்றன. இந்த மருத்துவ மனைக்கு, தனியார் மருத்துவம னைக்கு செல்ல முடியாத கூலி தொழிலாளிகளும், பாமரமக்களும் அதிகம் வருகின்றனர். மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு 15  ஆண்டுகளாகியும், மருத்துவமனை வளாகத்தில் பராமரிப்பு குறைவாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித் துள்ளனர். அதாவது, 5 அடுக்கு மாடியின் தரைதளத்தில் தீவிர சிகிச்சை அளிக் கும் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு  இருதயநோய், தீவிர காய்ச்சல், சுவாச கோளாறு, சீறுநீரக பிரிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரி வுகளின் வளாகத்தில் எலிகள் சுற்றித் திரிகின்றன. ஆள்நடமாட்டம் இருந் தாலும், எலிகள் நடமாட்டம் குறைவ தில்லை. நடந்து செல்லும் ஆட்க ளுக்கு மத்தியில் எலிகள் புகுந்து விளையாடுகின்றன. இப்படி பல் வேறு வார்டுகளில் எலிகள் நடமாட் டம் அதிகரித்துள்ளது. ஆனால், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. பல்வேறு காய்ச்சல் களால் பொதுமக்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், எலிகள் நடமாட் டத்தால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, எலி களால் லேப்டோ பைரோஸிஸ் நோய்  பரவும் அபாயம் உள்ளது. இதற்கு  காரணம் மருத்துவமனை குப்பை களை முறையாக சுத்தம் செய்வ தில்லை என பொதுமக்கள் தெரிவித் துள்ளனர். எனவே நோயளிகளுக் கும், பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் எலிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.