districts

img

தருமபுரி நகரில் ரூ.5 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் - நகராட்சி தலைவர் தகவல்

தருமபுரி, மார்ச் 18- தருமபுரி நகரில் முதற்கட்டமாக ரூ.5 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவங்கவுள்ளதாக நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தெரிவித்துள்ளார். தருமபுரி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், அண்ணா கூட்டரங்கில் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலை மையில் நடைபெற்றது. நகராட்சி துணைத்தலைவர் நித்யா  அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சித்ரா  சுகுமார் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் கவுன்சிலர் கள் பேசுகையில், தருமபுரி நகராட்சி பகுதியில் உள்ள  அனைத்து வார்டுகளுக்கும் தேவையான அனைத்து அடிப் படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். பச்சியம் மன் கோவில் அருகில் உள்ள மயானத்தில் நினைவாலயம் என்ற பெயரில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள், சமாதிகளை அகற்றி இனிவரும் காலங்களில் உடல்களை அடக்கம் செய்ய ஒரு வரையறை வகுக்க வேண்டும். நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு போடப்பட்டுள்ள கம்பி வேலி களை அகற்ற வேண்டும். குமாரசாமிப் பேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடங்களை கட்ட வேண்டும். சுகாதார வளாகங்களை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது பேசுகையில், தருமபுரி நகராட்சி பகுதியில் பொதுமக்களின் அனைத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்கப்படும். கவுன்சிலர்களின் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நிதி வந்தவுடன்,

அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறை வேற்றப்படும். முதல் கட்டமாக தருமபுரி நகரில் ரூ.5 கோடி  மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தரு மபுரி நகராட்சி முதன்மை நகராட்சியாக உருவாக்க அனை வரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார். முன்னதாக, கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில ளித்து நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் பேசுகையில், தருமபுரி நகராட்சி மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை  உள்ளது. அரசின் நிதி கிடைக்க பெற்றவுடன் கவுன்சிலர் களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான உரிய டெண்டர் விடப்பட்டு அர சின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும், என்றார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வினோத் பேசு கையில், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றங்களை கண்காணிக்கவும் கவுன்சிலர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டும், என்றார்.