கோவை, ஜன.9- கொரோனா முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப் பட்டன. மேலும், அத்தியவசியமற்ற தேவைக் காக வெளிவரும் பொதுமக்களின் நடமாட் டத்தை கண்காணிக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பர வல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி கோவையில் சனியன்று இரவு 10 மணிக்கு துவங்கிய முழு ஊரடங்கு திங்களன்று காலை 5 மணி வரை நடைமுறை படுத் தப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் வெறிச் சோடி காணப்பட்டது. வாளையார் சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு மேலும், தமிழக - கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடியில் வாகன போக்குவரத்து முற்றிலும் குறைந்தது. கன ரக வாகனங்கள் மட்டுமே கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வந்து கொண்டு இருக்கிறது. சோதனைச்சாவடியில் தமிழக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். அவசர தேவைகளுக்காக வரும் வாகனங்கள் மட்டுமே உரிய ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின் றது. கேரளாவில் இருந்து வருபவர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதற் கான ஆவணங்கள் வைத்திருந்தால் மட் டுமே அந்த வாகனங்களை காவல் துறை யினர் அனுமதித்து வருகின்றனர். இதே போல கோவை மாவட்டத்தில் பல்வேறு பகு திகளில் ஆங்காங்கே தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறை யினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர். இதேபோல் பொள்ளாச்சி, ஆனை மலை, கிணத்துக்கடவு, வால்பாறை உள் ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு பொது மக்களின் ஒத்துழைப்புடன் அமல்படுத்தப் பட்டது. இதனால், முக்கிய நகர்ப்புற பகுதி களான கடைவீதி, மார்க்கெட் வீதி, ராஜா மில் ரோடு, திருவள்ளுவர் திடல், கோவை ரோடு, காந்தி சிலை, கோட்டூர் ரோடு, பாலக் காடு ரோடு உள்ளிட்ட பல இடங்கள் வெறிச் சோடி காணப்பட்டன. இதைத்தவிர அரசு மற் றும் தனியார் மருத்துவமனைகள் மருந்த கங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை வழக்கம் போல செயல்பட்டன. மேலும், உணவங்களில் பார்சல் சேவைகள் மட் டுமே அனுமதிக்கப்பட்டது. உதகை இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் மக்கள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டன. குறிப் பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த உதகை சேரிங்கிராஸ் பகுதியானது வெறிச் சோடி காணப்பட்டது. மேலும், கண்காணிப் பில் ஈடுபட்ட காவல் துறையினர், அத்தியாவ சிய தேவைக்காக மட்டும் பொதுமக்களை அனுமதித்தனர்.