சேலம், செப்.15- சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவ மனை முதல்வர் மணி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்க ளுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரையிலும் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற பாதிப்புகளால் அவதிப் பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக காணப் படுகிறது. அதேசமயம், மழைக்காலத்தில் பர வும் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர் வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. சேலம் மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணியில் மாநக ராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் படும் நோயாளிகளுக்கு சேலம் அரசு மருத்து வமனையில் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் மணி கூறுகையில், சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற் போது வரை 2 பேர் மட்டும் டெங்கு அறிகுறி யுடன் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறப்பு வார்டில் 230 படுக்கைகள், அவசர சிகிச்சை பிரிவில் 30 படுக்கைகள் என மொத்தம் 260 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. நோயாளிகளுக்கு தேவையான ரத்தம் கூடுதலாக உள்ளது. தேவையான அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பு இருக்கிறது. மருத்துவர்கள், செவி லியர்கள், மருத்துவ உதவியாளர்கள் அனை வரும் தயார் நிலையில் உள்ளனர், என்றார்.