districts

img

தமிழகத்தில் எங்கும் டெங்கு பாதிப்பு இல்லை!

கோயம்புத்தூர், அக். 4 - தமிழகத்தில் தற்போது எங்கும் டெங்கு பாதிப்பு இல்லை என மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரி வித்தார்.

கோவை மாவட்டம், சிங்காநல் லூரில் 1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக  கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சமுதாய நலக் கட்டடம் மற்றும் தாளியூர் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் ரூபாய் 58.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகா தார அலகு கட்டடம் ஆகியவற்றை வெள்ளியன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடையும் நபர்களுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். 

இதனை தொடர்ந்து செய்தி யாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது எங்கும் டெங்கு பாதிப்பு இல்லை. 2017-இல் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 65 பேர் உயிரிழந்தனர். இந்த வருடத்தில் டெங்கு இறப்பு என்பது ஆறு பேர் தான். எடப்பாடி பழனி சாமி ஆட்சிக்காலத்தில் தான் டெங்கு வால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது டெங்கு பாதிப்பு எங்கு உள்ளது, என இபிஎஸ் காண்பிக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

மேலும், “நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் உள்ளதா என மருத்துவ நடமாடும் வாகனம் மூலம் பரிசோதிக்கப்பட்டு, தடுப்பு நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மலைப்பொழிவு அதிகமானால் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்படும்” என்றும் கூறினார்.