தருமபுரி, செப்.30- மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு பணிகளில் காது கேளாதோர், வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவிகிதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும். அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டு மனைபட்டா மற்றும் அரசு வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி ஆட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே.ஜி.கரூரான் தலைமை வகித்தார். இதில் மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாவட்டப் பொருளாளர் ஜி.தமிழ்ச்செல்வி, காது மற்றும் வாய்பேசா தோர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.திருஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.