திருப்பூர், பிப்.24- முத்தரப்பு ஒப்பந்தத்தினை ரத்து செய்திடக்கோரி உடு மலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பு, பொறி யாளர் அமைப்பு, மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பு ஆகி யவற்றின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிஒடிஇஇ திட்டத்துணைத்தலைவர் எம்.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டதில், மின்வாரி யத்தில் அவசரகதியில் மின் ஊழியர்கள், பொறியாளர்கள், ஓய்வு பெற்றோர் ஆகியோரின் நலன்களை பாதிக்கின்ற வகையில் ஏற்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தத்தினை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது. இதில், மத்தியமைப்பின் திட்டச் செயலாளர் கோவிந்தன், ஜெகானந்தா ஆகியோரும், பொறி யாளர் அமைப்பின் சார்பாக திட்டச் செயலாளர் திருநாவுக் கரசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்பாட் டத்தில், மின்வாரிய தொழிலாளர், பொறியாளர், ஓய்வு பெற் றோர் என திரளாக பங்கேற்றனர். முடிவில், மத்தியமைப்பு திட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.