districts

img

மருத்துவ உபகரணங்களின் விலையை குறைத்திடு

சேலம், அக்.17- மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலையை  குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து  மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு விற்பனை அபிவிருத்தி ஊழியர்கள் சட்டம்  (சேவைகளின் நிபந்தனை) சட்டம்) 1976யை பாதுகாக்க வேண்டும். விற்பனை அபிவிருத்தி ஊழியர்களுக்கான சட்டப் பூர்வ பணி விதிகளை வழங்க வேண்டும். அரசு மருத்துவ மனைகளில் மருத்துவப் பிரதிநிதிகள் நுழைவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும், மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் வேலை செய் வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகளைக் குறைத்து,  ஜிஎஸ்டியை அகற்ற வேண்டும். தரவு தனியுரிமையைப் பாது காக்க வேண்டும். பணியிடத்திற்கு தடையற்ற நுழைவை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத் தினர் செவ்வாயன்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்  செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் திலீப்மேனன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, சங்க மாநிலச் செயலாளர் பிரதிப் மேனன், மாவட்டச் செயலாளர் விஜயானந்த், மாநில  செயற்குழு உறுப்பினர் சௌந்திர ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.