சேலம், ஜன.25- பல்லடம் அருகே செய்தியாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேச பிரபு. இவர், புதனன்று அடையாளம் தெரியாத நபர்களால், கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது கோவை யில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழு வதும் பத்திரிகையாளர்கள் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக, கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில், திரளான ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர். அப்போது பத்திரிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனிடையே சிகிச்சை பெற்று வரும் நேசபிரபுவை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதன்பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதல்வர் அறிவித்த நிவாரணத்தொகையை வழங்கினார்.