districts

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக்.1- தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் இந்திய நிறுவனத் தொழிலாளர்க ளுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கத்தி னர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சாம்சங் இந்திய நிறுவனத் தொழிலாளர்கள், தங்க ளின் உரிமைகளை பெறுவதற்காக தொழிற் சங்கத்தை தொடங்கியுள்ளனர். இதற்கு நிறு வனத்தில் எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகி றது. இதனை கண்டித்து சிஐடியு தலைமை யில் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பி ரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் கோ.பழனியம் மாள், மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, பொருளாளர் எம்.அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.முருகன், மாவட்ட நிர்வாகி கே.தேவகி, ஓய்வூதியர் சங்க மாவட்ட தணிக்கையாளர் கே.புக ளேந்தி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் சி.காவேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலை வர் உசேன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மு.சீனிவாசன், மாவட்ட இணைச்செயலாளர் இளையராஜா, அங்கன் வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி, அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் தலைமையிலும், நம்பி யூரில் வட்டத் தலைவர் எம்.மகாலிங்கம் தலை மையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதேபோன்று சத்தி, அந்தியூர் மற்றும் கோபி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. திருப்பூர் இதேபோன்று, திருப்பூரில் மாவட்ட 

திருப்பூர்

இதேபோன்று, திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அவிநாசி வட்டாட் சியர் அலுவலகம், ஊத்துக்குளி வட்டாட்சி யர் அலுவலகம், திருப்பூர் வடக்கு வட்டாட்சி யர் அலுவலகம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்க ளில் ஈடுபட்டனர். உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் அம்சராஜ்,மாவட்டச் செயலாளர் எம்.பால சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன், வட்டச் செயலாளர் வெங்கிடுசாமி, ஓய்வூதியர் சங்க தலைவர் தாசன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர்.