districts

img

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை, செப்.16- ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப் பிய அன்னபூர்ணா ஓட்டல் உரிமை யாளர் அவமதிக்கப்பட்ட விவகாரத் தில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா  சீதாராமன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில், ‘இந்தியா’ கூட்ட ணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் அண்மையில் நடைபெற்ற தொழில் முனைவோரு டனான கலந்துரையாடல் கூட்டத் தில், ஜிஎஸ்டி குறித்து பிரபல அன் னபூர்ணா ஹோட்டல் உரிமையா ளர் சீனிவாசன், ஒன்றிய நிதியமைச் சர் நிர்மலா சீத்தாராமனிடம் கேள்வி  எழுப்பியுள்ளார். இதனை எதிர் கொள்ள திராணியற்ற பாஜகவினர்,  அன்னபூர்ணா ஓட்டல் உரிமையா ளர் சீனிவாசனை அழைத்துச்  சென்று, நிர்மலா சீதாராமனை  நேரில் சந்திக்க வைத்து, மன்னிப்பு  கோர செய்துள்ளனர். இந்த வீடியோ  காட்சிகள் பாஜகவினரால் வெளி யிடப்பட்டது அரசியல் வட்டாரத் தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜிஎஸ்டி குறித்து  கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவா சன் அவமரியாதை செய்யப் பட்டதை கண்டித்தும், இதற்கு கார ணமான ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும்  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் வானதி சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என  வலியுறுத்தி, திங்களன்று கோவை,  சிவானந்தா காலனி பகுதியில் ‘இந் தியா’ கூட்டணிக் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் கணபதி ராஜ் குமார், சிபிஐ மாநிலப் பொருளாளர்  ஆறுமுகம், திமுக மாவட்டச் செய லாளர் நா.கார்த்திக், காங்கிரஸ் கட் சியின் தேசிய செயலாளர் மயூரா  ஜெயக்குமார், தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் மற் றும் சிபிஐ, விசிக உட்பட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராள மானோர் கலந்து கொண்டனர். அப் போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து  கொண்டவர்கள் பன் மாலை அணிந் தும், கிரீம் பன்னை கையில் ஏந்திய படியும் முழக்கங்களை எழுப்பி னர்.