districts

img

விவசாயிகள், நிலமற்றோரின் வாழ்வாதாரத்திற்காக ஆர்ப்பாட்டம்

கடலூர், மார்ச் 12- நெய்வேலி நிலக்கரி நிறு வனத்திற்கு ஏற்கெனவே நிலம் கொடுத்து பாதிக்கப் பட்டவர்களும், விரிவாக்கத் திற்கு நிலம் எடுப்பதால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகள், நிலமற்ற விவசாய தொழி லாளர்களை பாதுகாக்க வலி யுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகிலுள்ள வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி, கரிவெட்டி, கத்தாழை, மும்முடிச் சோழகன், சாத்தப்பாடி, உள்ளிட்ட கிராம மக்களில் என்எல்சி சுரங்கத்திற்கும் விரிவாகத்திற்கும் நிலம் கொடுத்துள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழி லார்களும் மாற்று இடம், வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தி நிலத்தில் இறங்கி போராடினர். இந்தப்போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சர வணன், அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.பிரகாஷ் ஆகி யோர் தலைமை தாங்கி னார். மாவட்டத் தலை வர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், புவனகிரி ஒன்றியச் செய லாளர் காளி.கோவிந்த ராஜன், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடேசன், கரும்பு விவ சாயிகள் சங்கத் தலை வர் கே.ஆதிமூலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.