தருமபுரி, அக்.1- கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஓய்வூதியர் அமைப்புக ளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப் ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஒருங் கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பயனளிக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். பிஎப் ஆர்டிஏ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் குறைந் தபட்ச ஓய்வூதியத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்து ரைகளை ஏற்று 65, 70, 75, 80, வயதான வர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, உலக ஓய்வூதியர் தினத்தை முன் னிட்டு மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங் கிணைப்புக்குழு சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்புக்குழு மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சுப்பிர மணியன், பொருளாளர் ஏ.சோமசுந்தரம், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட் டத் தலைவர் எஸ்.பழனிச்சாமி, செயலாளர் எம்.பெருமாள் உட்பட பலர் கலந்து கொண் டனர். ஈரோடு உலக ஓய்வூதியர் தின சிறப்பு பேரவைக் கூட்டம் ஈரோடு கூடலிங்கம் திடலில் செவ் வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என். மணிபாரதி தலைமை வகித்தார். கண்ணி யமான ஓய்வூதியம், மருத்துவ சிகிச்சை, போக்குவரத்து, குடியிருப்பு, சுத்தமான குடி நீர் ஆகிய கோரிக்கைகளை விளக்கி அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க இணைச் செயலாளர் எம். கிரிஜா சிறப்புரையாற்றி னார். இதில், பிஎஸ்என்எல், அரசுபோக்கு வரத்து, மின்வாரியம், காப்பீட்டு உள்ளிட்ட ஓய்வூதியர் சங்கங்களை சார்ந்த திரளா னோர் பங்கேற்றனர். முடிவில், வி.வெள்ளி யங்கிரி நன்றி கூறினார். கோவை சர்வதேச ஓய்வூதியர் தினத்தையொட்டி கோவையில் ரயில் நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு, ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங் கிணைப்புக்குழு மாவட்ட துணைத் தலை வர் பி சுரேந்திரன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் கே.அருணகிரி வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலை வர் என். அரங்கநாதன், அகில இந்திய ஓய்வூ தியர் சங்கம் மாவட்டச் செயலாளர் ஏ.குடிய ரசு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.