districts

img

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.23- 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மெயின்  தொலைப் பேசி நிலையத்தில், பிஎஸ்என்எல் இயு, எஐபிடி பிஎ, டிஎன்டிசிலபல்யு ஆகிய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல்-க்கு 4ஜி, 5ஜி சேவையை உடனே வழங்க  வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண் டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க  வேண்டும். ஓய்வூதியர் ஊதிய மாற்றத்தை உடனே வழங்க  வேண்டும். பிஎஸ்என்எல் சொத்துகளை விற்பனை செய்யப்ப டுவது நிறுத்தப்பட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பிஎஸ்என்எல்இயு கிளைத் தலைவர் குமரவேல் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஐபிடிபிஎ சார்பில் பழ னிவேல்சாமி, விஸ்வநாதன், சௌந்தரபாண்டியன் ஆகி யோர் உரையாற்றினர். பிஎஸ்என்எல்இயு சார்பில் முன்னாள்  மாநில உதவி செயலர் சுப்ரமணியன் உரையாற்றினார். முடி வில், டிஎன் டிசிடிசிடபல்யு மாநில அமைப்பு செயலர் ரமேஷ்  நன்றி கூறினார்.