districts

img

நிறுத்தப்பட்ட ரயில்களை பயணிகள் வசதிக்கேற்ப இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ஜூலை 17 - கொரோனா பொது முடக்க காலத்தில் இருந்து நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை  பொதுமக்கள் பயணிப்பதற்கு ஏற்ப உடனடி யாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்  நடத்தியது. திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக தியாகி  குமரன் நினைவகம் அருகில் திங்களன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க் சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகர செயலாளர்  டி.ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி அணியினர் பெருந்திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர்.குறிப்பாக சேலம் கோவை பயணிகள் ரயில்,  ஈரோடு கோவை பயணிகள் ரயில், கோவை  நாகர்கோயில் பயணிகள் ரயில், பாலக்காடு டவுன் திருச்சி பயணிகள் ரயில் ஆகியவை கொரோனா பொது முடக்க காலத்தில் நிறுத் தப்பட்டன. பொது முடக்கம் நீக்கப்பட்ட பிற கும் இந்த ரயில்கள் முழுமையாக இயக்கப் படவில்லை.

இதில் சில பயணிகள் ரயில் களை, விரைவு ரயில் என்று பெயர் மாற்றி வழக் கமாக நிறுத்தப்படும் ஊர்களின் எண்ணிக் கையை குறைத்தும், பயணிகள் வசதிக்கு ஏற்ற நேரத்தை மாற்றியும், அடிக்கடி ஏதே னும் காரணங்களை சொல்லி இந்த ரயில் களை நிறுத்தியும் தென்னக ரயில்வே சேலம்  கோட்ட ரயில்வே நிர்வாகம் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால் கோவை திருப்பூர் ஈரோடு சேலம் வழித்தடத்தில் ஒவ் வொரு நாளும் வேலை மருத்துவம் கல்வி ஆகியவற்றிற்காக பயணம் செய்யும் ஆயிரக் கணக்கான ரயில் பயணிகள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பேருந்து  போக்குவரத்து கட்டண கொள்ளைக்கு வழி வகுக்கும் முறையில் பொதுப் போக்குவ ரத்தான ரயில்கள் நிறுத்தப்படுவது வன்மை யாக கண்டிக்கத்தக்கது. எனவே பயணிகள் ரயில்களை ஏற்கனவே  இயக்கப்பட்டது போல பயணிகளின் வச திக்கு ஏற்ற கால அட்டவணைப்படி முழுமை யாக தொடர்ச்சியாக இயக்க வேண்டும்.அதேபோல் திருப்பூரில் இருந்து தென் மாவட் டங்களுக்கான ரயில் வசதியை அதிகப் படுத்த வேண்டும், 50,000 கோடி ரூபாய்க்கு  மேலாக பனியன் உற்பத்தி வர்த்தகம் நடை பெறக்கூடிய திருப்பூர் மாநகருக்கு ஏற்ற முறையில் இங்குள்ள ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இங்கு வரக்கூடிய தொழிலாளர்கள் உள்ளிட்ட பய ணிகளுக்கு தேவையான அனைத்து வசதிக ளும் செய்து தர வேண்டும், சரக்குப் போக்குவ ரத்துக்கு உரிய ரயில் மற்றும் ரயில் முனைய  வசதிகளை மேம்படுத்த வேண்டும். தேவை யான வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள்  இயக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றம் மறுக்கும் தென்னக ரயில்வே மற்றும் சேலம்  கோட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டித் தும்,

ரயில்வே வளர்ச்சிப் பணிகளில் தமிழகம்  உள்ளிட்ட தென் மாநிலங்களை புறக்கணிக் கும் பிரதமர் மோடி தலைமையிலான ஆளும்  பாரதிய ஜனதா ஒன்றிய அரசை கண்டித்தும்  முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஏற்கனவே பலமுறை சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கும் ரயில்வே ஆலோசனை குழு  கூட்டத்திலும் மக்களவை எம்பிக்கள் மூலமா கவும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் அவற்றை நிறைவேற்றாமல் காலதாமதம் செய்யும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து  தலைவர்கள் உரையாற்றினர். பயணிகள் வச திக்கு ஏற்ப ரயில்களை இயக்காவிட்டால் அடுத்த கட்டமாக மார்க்சிஸ்ட் கட்சியினர் மற் றும் ரயில் பயணிகளை திரட்டி ரயில் நிலைய  முற்றுகை மற்றும் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற் படும் என்று இப் போராட்டத்தில் எச்சரிக்கை  விடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாரன்,  மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். வடக்கு காவல் நிலைய போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும், பெருந்திரளான ரயில்வே காவலர்களும் ரயில்வே முகப்பு பகுதியில் திரண்டு நின்றனர்.  மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தை அவர் கள் உன்னிப்பாக கவனித்தனர்.