மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்க ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.