districts

img

பேருந்துகளை முழுமையாக இயக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 5 - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உடுமலை கிளையில் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டம். உடுமலையில், அனைத்து வழித் தடங்க ளிலும் பேருந்துகளை முழுமையாக இயக்கிட வேண்டும். மேலும் முறையாக பதிலளிக்காமல் தன்னிச்சைப் போக்குடன் செயல்படும் கிளை மேலாளரைக் கண்டித் தும் உடுமலை ஒன்றியம் பள்ளப்பாளையம் கிளைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   முன்னதாக உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர் எஸ்.ஜெகதீசன் தலைமையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர்க்கு உடுமலை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 2 நிமி டம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கோரிக்கைகளை விளக்கி உடுமலை ஒன்றி யச் செயலாளர் கி.கனகராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் என்.சசிகலா, கமிட்டி உறுப் பினர்கள் எம்.ரங்கராஜ், எம்.டி.அருண்பிர காஷ், குமரகுரு ஆகியோர் உரையாற்றினர்.  இதில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட் டோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.