திருப்பூர், ஜன.6- மதுரை மேலூர் மக்களை தேடி மருத்துவ ஊழியர் மற்றும் அவர் கணவர் மீது கடுமை யான தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மக் களை தேடி மருத்துவ ஊழியர்கள் சிஐடியு தலைமையில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மதுரை- மேலூர் சேக்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத் துவம் திட்டத்தில் பணியாற்றி வரும் தன லெட்சுமி (எ) பிரேமா நர்சிங் பட்டய படிப்பு முடித்தவர். அவரது கணவர் செந்தில் பெயிண்டர். கடந்த ஜனவரி 4 ஆம் தேதி தனலெட்சுமி உடப்பம்பட்டி அங்கன்வாடி மையம் அருகே அமர்ந்து மக்களுக்கு மாத்தி ரைகளை கொடுத்துக் கொண்டிருந்தார். அப் போது அங்கு வந்த சிலர் தனலெட்சுமியிடம் தகாத முறையில் தகராறு செய்துள்ளார். மேலும், சாதியைக் குறிப்பிட்டு இழிவாக பேசியுள்ளார். “நீ மாத்திரை கொடுத்து எங்க ஆளுக உயிர் வாழனுமா? மாத்திரை கொடுக் காம நிறுத்துடி” என்று பேசி மாத்திரைகளை தட்டிவிட்டு பணிசெய்யவிடாமல் தடுத்துள் ளனர். என் வேலையை தடுக்காதீர்கள் என்று தனலெட்சுமி சொன்னதற்கு அவரின் சேலையை பிடித்து இழுத்து தாக்கியுள்ள னர். இதில் தனலெட்சுமி பலத்த காயம் அடைந்துள்ளார். மனைவி தாக்கப்படுவதை தடுக்க வந்த கணவர் செந்திலையும் தலை யில் அடித்துள்ளனர். பலத்த காயம் அடைந்த இருவரும் மேலூர் அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இக் கொடூரமான தாக்குதலை நடத்தியவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை முன்பு சிஐடியு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மகாலட் சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி, மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு கட்டுமான சம்மேளன மாநிலச் செய லாளர் டி.குமார் உட்பட திரளான மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் பங்கேற்றனர். இதில், மக்களைத் தேடி மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டது.